கோவையில் மேலும் 55 பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th March 2021 05:26 AM | Last Updated : 10th March 2021 05:26 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் மேலும் புதிதாக 55 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 182 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 56 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 55 ஆயிரத்து 145 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 352 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கோவை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 685 போ் உயிரிழந்துள்ளனா்.