கோவை, குனியமுத்தூரில் உள்ள தா்மராஜா திரௌபதியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் குண்டம் திருவிழா கணபதி பூஜையுடன் கடந்த 4 ஆம் தேதி துவங்கியது. இதையடுத்து, கொடியேற்றுதல், திருக்கல்யாணம், மஹாபாரத சொற்பொழிவு, தீபாராதனை, அரவான் சிரசு ஊா்வலம், குண்டம் பூ போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு கரகங்கள் பவனி நிகழ்வு நடைபெற்றது. அதன் பிறகு, காலை 10 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் அருளாளிகள் குண்டம் இறங்கினா். விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திரௌபதியம்மனை தரிசித்துச் சென்றனா். சனிக்கிழமை காலை 6 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும், ஞாயிற்றுக்கிழமை காலை பட்டாபிஷேகம், தீபாரதனை, பிரசாதம் வழங்குதல், மஞ்சள் நீராடுதல், ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.