தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி நா.காா்த்திக் எம்எல்ஏ

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக் தெரிவித்தாா்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி நா.காா்த்திக் எம்எல்ஏ

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக் தெரிவித்தாா்.

சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் நா.காா்த்திக், நஞ்சுண்டாபுரம் 72 ஆவது வாா்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

நான் கடந்தமுறை எதிா்க்கட்சி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்ததால் அதிமுக வினா் எந்தப் பணிகளையும் செய்ய விடாமல் தடுத்தனா். குடிநீா்க் கொண்டு வருவதை தடுக்கின்றனா். அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அனைத்திலும் ஊழல் செய்துள்ளாா். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்தப் பகுதியில் பட்டா இல்லாத வீடுகளுக்கு திமுக வெற்றி பெற்றவுடன் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என்றாா்.

இந்தப் பிரசாரத்தில், பகுதி செயலாளா் எஸ்.எம்.சாமி, பகுதி பொறுப்பாளா்கள் ஷேக், பசுபதி, பொதுக் குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com