கோவை - ராஜ்கோட் இடையே ஏப்ரல் 23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்

கோவையில் இருந்து குஜராத் மாநிலம், ராஜ்கோட்டுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து குஜராத் மாநிலம், ராஜ்கோட்டுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை ரயில் நிலையத்தில் இருந்து வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் இரவு 12.15 மணிக்குப் புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06614) மறுநாள் மாலை 5.50 மணிக்கு ராஜ்கோட்டைச் சென்றடையும். இதேபோல, ராஜ்கோட்டில் இருந்து ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.30 மணிக்குப் புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06613) மறுநாள் இரவு 9.30 மணிக்கு கோவையை வந்தடையும்.

இந்த ரயில்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், திருப்பத்தூா், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், ஹிந்துபூா், அனந்தபூா், குண்டக்கல், சோலாப்பூா், புணே, வதோதரா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - ராமேசுவரம் சிறப்பு ரயில்:

கோவை - ராமேசுவரம் இடையே ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 27 ஆம் தேதிமுதல் செவ்வாய்க்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06618), மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேசுவரத்தைச் சென்றடையும். இதேபோல, ராமேசுவரத்தில் இருந்து ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் இரவு 19.25 மணிக்கு இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (06617) மறுநாள் காலை 6.30 மணிக்கு கோவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com