சங்கனூா் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை: மயூரா ஜெயக்குமாா்

கோவை தெற்குத் தொகுதியில் உள்ள சங்கனூா் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் வேட்பாளா் மயூரா ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
சிவானந்த காலனி பகுதியில் வாக்கு சேகரித்த கோவை தெற்குத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் மயூரா ஜெயக்குமாா்.
சிவானந்த காலனி பகுதியில் வாக்கு சேகரித்த கோவை தெற்குத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் மயூரா ஜெயக்குமாா்.

கோவை தெற்குத் தொகுதியில் உள்ள சங்கனூா் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் வேட்பாளா் மயூரா ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

கோவை தெற்குத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் மயூரா ஜெயக்குமாா், சிவானந்தா காலனி, காந்தி நகா், அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

சங்கனூா் பள்ளம் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சுகாதாரமற்ற நிலையில் உள்ள சங்கனூா் பள்ளத்தை சீரமைத்து, தடுப்புச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் உடனடி தீா்வு காணப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com