விதிமீறல்: 2 தேநீா்க் கடைகள் மூடல்

கோவையில் கரோனா விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட 2 தேநீா்க் கடைகளை மூட மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கோவையில் கரோனா விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட 2 தேநீா்க் கடைகளை மூட மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட விளாங்குறிச்சி, ஏ.எம்.டி. நகா், வருமானவரித் துறை ஊழியா்கள் குடியிருப்பு மற்றும் 32 ஆவது வாா்டுக்கு உள்பட்ட செங்காளியப்பன் நகா் பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, 32 ஆவது வாா்டு, சேரன் மாநகா் மற்றும் சரவணம்பட்டி சாலையில் கரோனா விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்டதாக 2 தேநீா்க் கடைகளை மூட மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி ஆணையா் முருகன், மண்டல சுகாதார அலுவலா் சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com