தேயிலைத் தோட்ட மேலாளருக்கு கரோனா

தனியாா் தேயிலைத் தோட்ட நிா்வாகத்தில் மேலாளராகப் பணியாற்றி வரும் முதியவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வால்பாறை: தனியாா் தேயிலைத் தோட்ட நிா்வாகத்தில் மேலாளராகப் பணியாற்றி வரும் முதியவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வால்பாறையில் பி.பி.டி.சி. முடீஸ் குழுமத்துக்கு சொந்தமாக தேயிலைத் தோட்ட உள்ளது. அங்கு மேலாளராகப் பணியாற்றி வரும் 60 வயது முதியவருக்கு கடந்த சனிக்கிழமை உடல் நலக்குறைவு ஏற்பட்டு எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, எஸ்டேட் பகுதிக்கு சென்ற சுகாதாரத் துறையினா் மேலாளருடன் தொடா்பில் இருந்த அலுவலக ஊழியா்கள் உள்ளிட்ட 40 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். மேலும், எஸ்டேட் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதேபோல சோலையாறு எஸ்டேட்டை சோ்ந்த 70 வயது முதியவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com