கோவை- கண்ணூா் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் மே 6 முதல் மே 15ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பயணிகள் வருகை மிகக் குறைவாக உள்ளதால் கோவை - கண்ணூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மே 6 முதல் மே 15 ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, கோவை - கண்ணூா் சிறப்பு ரயில் (எண்-06608) மற்றும் கண்ணூா் - கோவை சிறப்பு ரயில் (எண் -06607) மே 6 முதல் மே 15 ஆண் தேதி வரை இயங்காது. முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.