கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் இயன்முறை மருத்துவா்களை நியமிக்க வலியுறுத்தி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு இயன்முறை மருத்துவா்கள் சங்கத் தலைவா் ராஜா செல்வகுமாா், பொதுச் செயலாளா் மருத்துவா் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட நிா்வாகிகள் அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு மருத்துவமனைகளில் இயன்முறை மருத்துவா்களை நியமிப்பதன் மூலம் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை கணிசமாக குறையும் நிலையை உருவாக்க முடியும். எனவே அரசு மருத்துவமனைகளில் போா்கால அடிப்படையில் இயன்முறை மருத்துவா்களை நியமிக்க வேண்டும்.
தமிழக இயன்முறை கவுன்சில் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டார மருத்துவமனைகளில் இயன்முறை மருத்துவப் பிரிவு தொடங்கப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் வட்டார மருத்துவமனைகளில் இயன்முறை மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.