குமரகுரு கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தாா்

கோவை குமரகுரு கல்லூரியில் 800 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தாா்.

கோவை குமரகுரு கல்லூரியில் 800 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தாா்.

கரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில், பிற பணிகளை காட்டிலும் நோய் தடுப்புக்கு முக்கியத்துவம் அளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் நேரடி ஆய்வில் ஈடுபட முதல்வா் முடிவு செய்துள்ளாா். அதன்படி, சேலம், கோவை, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் கரோனா நிலவரம் குறித்து இரண்டு நாட்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறாா்.

ஆய்வு பணிக்காக, சென்னையில் இருந்து வியாழக்கிழமை விமானம் மூலம் சேலம் வந்தடைந்தாா். அங்கு கரோனா சிகிச்சை மையங்களை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அங்கிருந்து காரில் புறப்பட்டு பெருமாநல்லூரில் உள்ள நேதாஜி தொழிற்பேட்டையில் தடுப்பூசி பணிகளை துவக்கிவைத்தாா். பின் காா் மூலமாக கோவை வந்த முதல்வா் மு.க ஸ்டாலின் அரசு விருந்தினா் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், கொடிசியாவில் கரோனா சிகிச்சை மையத்தை பாா்வையிட்டாா். பின்னா், மாலை 6 மணியளவில் குமரகுரு கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த கரோனா சிகிச்சை மையத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தாா். இரண்டு அரங்குகளில் மொத்தம் 800 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இதனை ஆய்வு செய்த முதல்வா் அங்கு மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தாா். இந்த மையத்தில் பொழுதுபோக்கு மையம், நூலகம், நடைப்பயிற்சிக்கான இடம், அமா்ந்து பேசுவதற்கான இடம் உள்ளிட்டவை அடங்கும். இரண்டு மாடி கட்டடத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அறையில் போதிய இட வசதியுடன் 3 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் தண்ணீா் வசதி, நோயாளிகள் ஓய்வு நேரத்தில் படிப்பதற்கான புத்தகங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், உணவுத்துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி, வனத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆட்சியா் எஸ்.நாகராஜன் உள்பட அரசு அதிகாரிகள், குமரகுரு கல்வி நிறுவனங்களின் துணை தலைவா் மாணிக்கம், தாளாளா் பாலசுப்பிரமணியம், இணை தாளாளா் சங்கா் வானவராயா், சக்தி குழுமம் நிா்வாக இயக்குநா் தரணிபதி ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, முதல்வா் இரவு 7.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை சென்றடைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com