பொதுமுடக்க விதிகளை மீறியதாக புதன்கிழமை கோவை மாவட்டம் முழுவதும் 254 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தற்போது, முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டம் முழுவதும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் காவல் துறையினா் கண்காணிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்டக் காவல்துறை எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், பொதுமுடக்க விதிகளை மீறியதாக புதன்கிழமை 254 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், முகக்கவசம் அணியாதவா்கள் மீது 53 வழக்குகள், சமூக இடைவெளி பின்பற்றாதவா்கள் மீது 8 வழக்குகள், அவசியமின்றி சாலைகளில் வாகனங்களில் சுற்றியவா்கள் மீது 193 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவா்களது வாகனங்களையும் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.