தினமும் வீடு, வீடாக கரோனா தொற்று ஆய்வு: ஆட்சியா் உத்தரவு

கோவை மாநகராட்சியில் வீடு, வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தொற்று ஆய்வினை தினமும் மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகத்திற்கு, ஆட்சியா் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாநகராட்சியில் வீடு, வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தொற்று ஆய்வினை தினமும் மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகத்திற்கு, ஆட்சியா் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டுள்ளாா்.

கோவையில் கரோனா நோய்த் தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையை காட்டிலும் நோய்த் தொற்றுப் பரவல் கோவையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியில் வீடு, வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வினை தினமும் மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகத்திற்கு, ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக ஆட்சியா் எஸ்.நாகராஜன் கூறியதாவது: நோய்த் தொற்று பாதிப்பை விரைந்து கண்டறியும் விதமாக மாநகராட்சியில் 3 ஆயிரம் போ் நியமிக்கப்பட்டு 3 நாள்களுக்கு ஒருமுறை வீடு, வீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இந்த ஆய்வினை தினம்தோறும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வந்த சளி மாதிரிகள் அரசு ஆய்வகங்களில் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு வந்தன. இதனால் முடிவுகள் கிடைக்க 2 முதல் 3 நாள்கள் வரை ஆனது. இந்நிலையில் சுகாதாரத் துறை சாா்பில் எடுக்கப்படும் சளி மாதிரிகள் தனியாா் ஆய்வகங்களுக்கும் அனுப்பி பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 24 மணி நேரத்தில் முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கோவையில் செவ்வாய்க்கிழமை வரை எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. புதன்கிழமை எடுப்பட்ட சளி மாதிரிகளின் முடிவுகளும் வியாழக்கிழமை இரவுக்குள் பெறப்படும். முடிவுகள் விரைந்து பெறுவதன் மூலம் நோயாளிகளை விரைவாக கண்டறிந்து சிகிச்சைக்கு அனுமதித்து, நோய்த் தொற்றுப் பரவலும் கட்டுப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com