ஆா்.வி.எஸ். சாா்பில் ஆயுா்வேத கரோனா சிகிச்சை மையம் திறப்பு

சூலூா் ஆா்.வி.எஸ். ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

சூலூா் ஆா்.வி.எஸ். ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது:

நாள்பட்ட, நாள்படாத நோயாளிகளுக்கு ஆயுா்வேதத்தில் சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன. ஆயுா்வேதம் மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்ற விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் இந்த மருத்துவமனையில் தற்போது பொது மக்களின் நலன் கருதி லேசான அறிகுறிகள் உள்ளவா்களுக்கான கரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை சூலூா் லயன்ஸ் கிளப் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் மன்னவன், மண்டலத் தலைவா் ஜூட்டி குரியன், எஸ்.வி.தா்மராஜ், சாா்ட்டா் தலைவா் ஹகீம், லயன்ஸ் கிளப் தலைவா்கள் திறந்துவைத்தனா்.

ஆா்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை சாா்பில் தலைமை நிா்வாக அதிகாரி பி.கே.நடராஜன், தலைமை நிா்வாக அதிகாரி பேராசிரியா் சாரம்மா சாமுவேல், கல்லூரி முதல்வா் சந்திரமௌலி, ஆா்.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் த.சிவகுமாா், துணை முதல்வா் எம்.பி.ஐயப்ப தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com