திருவனந்தபுரம்-மால்டா இடையே சிறப்பு ரயில்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் மால்டா இடையே கோவை வழித் தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் மால்டா இடையே கோவை வழித் தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து ஜூன் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 3 ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு மால்டா நிலையத்தைச் சென்றடையும். இதேபோல, மால்டாவில் இருந்து ஜூன் 4 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 7 ஆம் தேதி இரவு 11.10 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த ரயிலானது, கொல்லம், செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல், நெல்லூா், விஜயவாடா, ராஜமுந்திரி, சாமல்கோட், விசாகப்பட்டினம், புவனேஷ்வா், கட்டாக் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com