அஞ்சல் ஊழியா்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த வலியுறுத்தல்

கோவையில் பணியாற்றும் அஞ்சல் ஊழியா்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து, கரோனா தடுப்பூசி செலுத்த கோவை கோட்ட அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

கோவையில் பணியாற்றும் அஞ்சல் ஊழியா்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து, கரோனா தடுப்பூசி செலுத்த கோவை கோட்ட அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

கோவை அஞ்சல் கோட்டத்தில் குட்ஷெட் சாலை, ஆா்.எஸ்.புரம் ஆகிய 2 இடங்களில் தலைமை அஞ்சல் நிலையங்களும், கோட்டம் முழுவதும் 79 துணை அஞ்சல் நிலையங்கள், 100 க்கும் மேற்பட்ட கிளை அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

தற்போது, கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கோவை கோட்டத்தில் அஞ்சல் ஊழியா்கள் அதிகமானோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். கடந்த சில நாள்களில் 5 க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியா்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், கோவை அஞ்சல் கோட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து, கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அஞ்சல் ஊழியா்கள் சங்க கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவசண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com