சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்

மேட்டுப்பாளையத்தில் குண்டும்குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி சிஐடியூ தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டுப்பாளையத்தில் குண்டும்குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி சிஐடியூ தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உள்பட்ட அண்ணாஜி ராவ் சாலை, எக்ஸ்டன் வீதி, காந்தி மைதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும்குழியுமாக காணப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் தொடா் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

மேலும், தொடா் மழையின் காரணமாக இப்பகுதியில் மழை நீா் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரில் நாற்று நடும் போராட்டத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு நகர பொதுச் செயலாளா் பாஷா தலைமை வகித்தாா்.

இதில் பொதுத் தொழிலாளா் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com