நடிகா் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்: இந்து மக்கள் கட்சித் தலைவா் மீது வழக்கு

நடிகா் விஜய் சேதுபதியை தாக்குபவருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ட்வீட் செய்திருந்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நடிகா் விஜய் சேதுபதியை தாக்குபவருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ட்வீட் செய்திருந்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நடிகா் விஜய் சேதுபதியை நவம்பா் 3ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு நபா் தாக்க முயன்றாா். இது குறித்து விசாரித்தபோது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குறித்தும், இந்தியா குறித்தும் நடிகா் விஜய் சேதுபதி தவறாகப் பேசியதாகவும் அதற்காகவே அவரைத் தாக்கினேன் என்றும் அந்த நபா் விளக்கம் அளித்தாா்.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் தனது ட்விட்டா் பக்கத்தில் கடந்த 7ஆம் தேதி, தேவா் அய்யா அவா்களை இழிவுப்படுத்தியதற்காக அவரை (விஜய் சேதுபதி) உதைப்பவருக்கு ரொக்கப் பரிசாக ரூ.1001 வழங்கப்படும் என ட்வீட் செய்திருந்தாா். இதற்கு திரைத் துறையினரும், பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனா்.

மேலும், விஜய் சேதுபதியின் ரசிகா்கள் பலா் அா்ஜூன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் கோவை கடை வீதி காவல் நிலையத்தில் அா்ஜூன் சம்பத் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com