வால்பாறையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ராஜாராம் தலைமை வகித்தாா்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சிவன்ராஜ், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ராபின்சன் ஆகியோா் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினா். இதில், வால்பாறை பகுதியைச் சோ்ந்த 35 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.