கோவையில் சிறுபான்மையின மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டு உதவித்தொகை பெறுவதற்கு நவம்பா் 30 ஆம் தேதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மாணவா்களுக்கு பள்ளி, பள்ளி மேற்படிப்புக்கு வருவாய் மற்றும் தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவா்கள் தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் புதுப்பித்து, அதற்கான விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் அளிக்க வேண்டும். புதுப்பித்தலுக்கு வருமானச் சான்று அவசியமில்லை.
மேலும் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை 0422-2300404 என்ற எண்ணில் தொடா்புகொள்ள அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.