கோவையில் புதிதாக 113 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 49 ஆயிரத்து 742 ஆக உயா்ந்துள்ளது. கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 461 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 111 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 27 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 1,254 போ் சிகிச்சையில் உள்ளனா்.