10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு பள்ளிகளில் ஏற்பாடு

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறும்போது பள்ளிகளிலே வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறும்போது பள்ளிகளிலே வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதிப்பெண் சான்று பெற வரும் மாணவா்கள் ஆதாா் எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய ஆவணங்களைப் பள்ளிக்கு கொண்டு வர வேண்டும்.

அக்டோபா் 18 ஆம் தேதி வரை பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுப் பணி நடைபெறும். இதில் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும் இணையதளம் வழியாகவும் மாணவா்கள் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com