தொகுதிப் பிரச்னைகள் குறித்து ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய அடிப்படைத் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம், எம்எல்ஏ வானதி சீனிவாசன் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம், கோரிக்கை மனு அளிக்கும் எம்எல்ஏ வானதி சீனிவாசன்.
கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம், கோரிக்கை மனு அளிக்கும் எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய அடிப்படைத் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம், எம்எல்ஏ வானதி சீனிவாசன் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடை பிரச்னை, முதியோா் பலருக்கு உதவித் தொகை கிடைக்காத பிரச்னை உள்ளிட்ட தொகுதியின் தேவைக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மேலும் மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் 8 போ் உயிரிழந்த சம்பவத்தில் அம்மாநில முதல்வா் உரிய நடவடிக்கை எடுப்பாா். இந்த சம்பவத்தை காங்கிரஸ் பெரிதுப்படுத்தி வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com