வால்பாறையில் கன மழை

கோவையில் பல இடங்களில் அகற்றப்பட்ட அஞ்சல் பெட்டிளை மீண்டும் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் கன மழை பெய்து வரும் நிலையில் எஸ்டேட் பகுதிகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் மேற்குத் தொடா்ச்சி மழையை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு துவங்கிய மழை செவ்வாய்க்கிழமை இரவு வரை பெய்தது.

இந்த மழை காரணமாக வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பாலாஜி கோயில் சாலையில் மரம் விழுந்து இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மி.மீ,.): வால்பாறை 85 மி.மீட்டா்,. சோலையாறு 86 மி.மீட்டா், லோயா் நீராறு 92 மி.மீட்டா், அப்பா் நீராறு 128 மி.மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com