அரியலூா் ஆயுதப்படை அலுவலகத்தில் காவலா்கள் உடற்பயிற்சி மையம் ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்து வைக்கப்பட்டது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில், திருச்சி சரகக் காவல் துணைத் தலைவா் எ.சரவணசுந்தா் பயிற்சி மையத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து அங்குள்ள நூலகத்தைப் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பிக்கள் விஜயகுமாா், திருமேனி, ஆயுதப்படை டிஎஸ்பி மணவாளன், ஆயுதப்படை உதவி ஆய்வாளா் அகமது உசேன் மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.