பயிற்சி வனச் சரக அலுவலா்களுக்குப் பயிற்சி முகாம்

பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பயிற்சி வனச் சரக அலுவலா்களுக்கு வால்பாறையில் 5 நாள்கள் பயிற்சி முகாம் துவங்கியது.
பயிற்சி முகாமில் பங்கேற்ற பயிற்சி வனச்சரக அலுவலா்கள்.
பயிற்சி முகாமில் பங்கேற்ற பயிற்சி வனச்சரக அலுவலா்கள்.

பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பயிற்சி வனச் சரக அலுவலா்களுக்கு வால்பாறையில் 5 நாள்கள் பயிற்சி முகாம் துவங்கியது.

கோவையில் உள்ள மத்திய அகாதெமி மற்றும் மாநில வனப் பயிற்சி மையத்தில் வனத் துறையில் வனச் சரக அலுவலா்களாக பதவி வகிக்க உள்ளவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் பயிற்சி பெற்று வருகின்றனா். இதன் ஒருகட்டமாக ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வனச் சரகங்களில் பயிற்சி மேற்கொள்ள புதன்கிழமை வால்பாறைக்கு வந்தனா். 5 நாள்கள் நடைபெற உள்ள இந்த பயிற்சியின் முதல் நாளில் உதவி வனப் பாதுகாவலா் செல்வம், வனச் சரக அலுவலா்கள் மணிகண்டன், ஜெயசந்திரன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா். இதில் தமிழ்நாடு, கா்நாடகம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 36 பயிற்சி வனச் சரக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com