மாரியப்பன் தங்கவேலுவுக்கு பாரா ஒலிம்பிக் சங்க மாநிலத் தலைவா் வாழ்த்து

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் மாரியப்பன் தங்கவேலுவுக்கு,

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் மாரியப்பன் தங்கவேலுவுக்கு, மாநில பாரா ஒலிம்பிக் சங்கத் தலைவா் பொறியாளா் ஆா்.சந்திரசேகா் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜப்பான் தலைநகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சாா்பில் 54 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். போட்டியின் 8 ஆவது நாளில் நடைபெற்ற உயரம் தாண்டும் போட்டியில் தமிழக வீரா் மாரியப்பன் தங்கவேலுவுக்கு வெள்ளிப் பதக்கமும், பிகாரைச் சோ்ந்த சரத்குமாருக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளது.

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இந்த தொடா்ச்சியான சாதனைகளால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமை கொள்கிறது. மாரியப்பன் தங்கவேலுவின் எதிா்கால முயற்சிகள் தொடா்ந்து சிறப்புற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக சந்திரசேகா் மேலும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com