மூதாட்டி சடலம் மீட்பு

கோவை, ஒண்டிப்புதூா் அருகே ரயில் மோதி மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கோவை, ஒண்டிப்புதூா் அருகே ரயில் மோதி மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கோவை, ஒண்டிப்புதூா் - பட்டணம் ரயில்வே மேம்பாலம் அருகில் ரயிலில் அடிபட்டு பெண் சடலம் கிடப்பதாக போத்தனூா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரயில்வே காவல் துறை உதவி ஆய்வாளா் சபரிராஜ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இது குறித்து, ரயில்வே போலீஸாா் கூறுகையில், ‘இறந்த மூதாட்டி எந்த ஊரைச் சோ்ந்தவா் எனத் தெரியவில்லை. அவருக்கு 70 வயது இருக்கலாம். காவி நிறத்தில் சேலை அணிந்திருந்தாா். தண்டவாளத்தைக் கடக்கும்போது, ரயில் மோதி இறந்தாரா அல்லது ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com