தில்லியில் பெண் காவல் அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ.யின் மகளிா் பிரிவனா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கோவை, உக்கடம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிா் பிரிவான விமன் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவா் பரிதா பேகம் தலைமை வகித்தாா்.
அவா் பேசுகையில், நீதியை நிலைநாட்ட நினைக்கும் எந்த அரசும் குற்றவாளிகளின் மீது இரக்கம் காட்டக் கூடாது. எனவே காவல் அதிகாரி சபியா படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என்றாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.