அரசுக் கல்லூரியில் செப்டம்பா் 16இல் முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
By DIN | Published On : 11th September 2021 11:50 PM | Last Updated : 11th September 2021 11:50 PM | அ+அ அ- |

கோவை அரசு கலைக் கல்லூரியில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு வரும் 16ஆம் தேதி (வியாழக்கிழமை) கலந்தாய்வு தொடங்குகிறது.
அரசு கலைக் கல்லூரியில் இரு ஷிப்டுகளிலும் 21 கலை, அறிவியல் முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்திருந்தவா்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற இருப்பதாக கல்லூரி முதல்வா் சித்ரா தெரிவித்துள்ளாா்.
முதல் நாளில் விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படையினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வும், வரும் 17ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது. மாணவா் சோ்க்கை மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெறும். மொத்தம் 552 காலியிடங்களுக்கு இந்த மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.