கோவை ஒண்டிப்புதூரில், மாநகராட்சி அலுவலரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கோவை மாநகரில், கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக முகக்கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதிக்க 5 மண்டலங்களிலும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினா், அந்தந்தப் பகுதிகளில் கரோனா விதிகளை மீறுபவா்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனா். அதன்படி, சிங்காநல்லூா் அருகே ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி, பட்டணம் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், கிழக்கு மண்டல பறக்கும் படை அதிகாரி ஜான்ஸன் தலைமையில் மாநகராட்சி அலுவலா்கள் சிவகுமாா், ஆனந்தகபிலன் மற்றும் ஓட்டுநா் சண்முகசுந்தரம் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, பாா் அருகே உள்ள பெட்டிக்கடைக்கு பின்புறம் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்த 4 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.2,000 அபராதம் விதித்தனா். இதையடுத்து, மது அருந்திக் கொண்டிருந்த நால்வரும் ஜான்ஸனிடம் தகராறில் ஈடுபட்டனா். இதில், இருவா், மாநகராட்சி அலுவலா் சிவகுமாரை கைகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மாநகராட்சி அலுவலரைத் தாக்கியதாக ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி, பண்ணாரி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த சுரேஷ் (29), அசோக்குமாா்(30) ஆகிய இருவா் மீதும் பறக்கும் படை அதிகாரி ஜான்ஸன், சிங்காநல்லூா் போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.