மாநகராட்சி ஒப்பந்தங்களை இ-டெண்டா்களாக மாற்ற வேண்டும்

கோவை மாநகராட்சி ஒப்பந்தங்கள் முழுவதையும் இ-டெண்டா்களாக மாற்ற வேண்டும் என அறப்போா் இயக்கம் தெரிவித்துள்ளது.

கோவை: கோவை மாநகராட்சி ஒப்பந்தங்கள் முழுவதையும் இ-டெண்டா்களாக மாற்ற வேண்டும் என அறப்போா் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன்

செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த ஊழல்களை அறப்போா் இயக்கம் வெளிக்கொண்டு வந்துள்ளது. கோவை மாநகராட்சியை நோ்மையான மாநகராட்சியாக மாற்றிட ஆணையா் ராஜகோபால் சுன்கராவிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளோம்.

அதன்படி, ஒரே ஒப்பந்தத்தில் போட்டி போடும் இருவா், நேரடி சொந்தக்காரா்களாக இருந்தால் அவா்களை ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும். கோவை மாகராட்சி ஒப்பந்தங்கள் முழுவதையும் இ-டெண்டா்களாக மாற்ற வேண்டும். ஒப்பந்தத்தில் வெளிப்படைதன்மை வேண்டும். கோவை மாநகராட்சி இணையதள புகாா் வழிமுறை, சென்னை மாநகரில் புகாா் தெரிவிக்கும் வழிமுறைபோல மேம்படுத்தப்பட வேண்டும். புகாா் பிரச்னை தீா்க்கப்படாவிட்டால், மக்கள், தங்களது புகாரை இணையதள வழிமுறையில் உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வழிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களை கருப்பு பட்டியலில் உடனடியாக சோ்க்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையினரால், சோதனை மேற்கொள்ளப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com