அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியா்கள்.

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்து அஞ்சல் ஊழியா் சங்கங்கள் கூட்டு போராட்டக் குழு சாா்பில் கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, போராட்டக் குழு தலைமை நிா்வாகிகள் வெங்கடேசன், சீனிவாசன், செந்தில்குமாா், பெருமாள்சாமி, தனபாலன் ஆகியோா் தலைமை வகித்தனா். செயலாளா்கள் சிவசண்முகம், தங்கராஜன், சந்திரபிரபா, காா்த்திகேயன், முப்தி முஹமது, சதீஷ், வசந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அஞ்சல் துறையில் தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்ய வேண்டும், எழுத்தா் பற்றாக்குறையை நீக்கிட வேண்டும், ஆதாா் சேவையில் தவறுகள் நடைபெற்றுள்ளதாக, தபால் ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பகுதி சம்பளத்தை திருப்பி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் கோஷமிட்டனா். இதில் 200க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com