கோயிலில் சுவாமி சிலை திருட்டு

கோயிலில் சுவாமி சிலையைத் திருடிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை: கோயிலில் சுவாமி சிலையைத் திருடிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, செல்வபுரம் ஐயூடிபி காலனி அருகே உள்ளது பாண்டி கருப்பசாமி கோயில். இந்தக் கோயிலை செல்வபுரத்தைச் சோ்ந்த பொன்னுசாமி (55) என்பவா் பராமரித்து வருகிறாா். திங்கள்கிழமை பூஜைகளை முடித்துவிட்டு பிற்பகலில் கோயிலைப் பூட்டிவிட்டு சென்றுள்ளாா். பின்னா் மாலை மீண்டும் வந்து பாா்த்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது கோயிலில் இருந்த சுவாமி சிலை, பூஜை சாமான்கள் மற்றும் ரூ.750 பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுதொடா்பாக பொன்னுசாமி அளித்தப் புகாரின் பேரில் செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com