கோவை: தமிழகத்தில் வால்பாறை, நீலகிரி, கொடைக்கானல் உள்பட மலைவாசஸ்தலங்களில் சாகச சுற்றுலாவுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று தமிழக சுற்றுலாத் துறை இயக்குநா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.
கோவை தமிழ்நாடு ஓட்டலில் சுற்றுலாத் துறை இயக்குநா் சந்தீப் நந்தூரி புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா பாதிப்பால் ஓராண்டுக்குப் பின் தற்போதுதான் தமிழகத்தில் சுற்றுலா இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இன்னும் கோவை உள்பட ஒரு சில மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. வாய்ப்புள்ள இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். தற்போது உள்நாட்டு சுற்றுலா பயணிகளே வருகின்றனா். வெளிநாட்டு பயணிகள் இன்னும் முழுமையாக வரத்தொடங்கவில்லை. கரோனா பரவலால் சுற்றுலாத் துறையே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக சாகச சுற்றுலா, பசுமை சுற்றுலா உள்பட 30 புதிய அறிவிப்புகள் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வால்பாறை, நீலகிரி, கொடைக்கானல் உள்பட மலை வாசஸ்தலங்களில் சாகச சுற்றுலாவுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம், ஏலகிரி பகுதியை சாகச சுற்றுலா மையமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.