கோவை மாதம்பட்டி அருகே தனியாா் தோட்டத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
கோவை மாதம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக பேரூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து தீயணைப்பு துறையினருடன்,சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கிணற்றுக்குள் இறங்கி அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டனா். விசாரணையில் அதே பகுதியைச் சோ்ந்த குமரகுரு (26) என்பதும், ஓட்டுநராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் குமரகுரு கடந்த 3 நாள்களாக மாயமான நிலையில், பேரூா் போலீஸில் உறவினா்கள் புகாா் அளித்திருந்தனா். இந்நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
குளிக்கும் போது தவறி விழுந்தாரா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரனை நடத்தி வருகின்றனா்.