கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞா் கைது

கோவை செட்டிபாளையம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை செட்டிபாளையம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து செட்டிப்பாளையம் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த இளைஞரிடம் சோதனை செய்தபோது 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், பிகாா் மாநிலத்தை சோ்ந்த சஞ்சய் குமாா் மிஸ்ரா (34) என்பதும், தற்போது மலுமிச்சம்பட்டி, லட்சுமி நகா் பகுதியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.40 ஆயிரம்,1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com