கோவை: கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் எம்.ஃபில், பி.ஹெச்டி. படிப்புகளுக்காக இணையவழியில் திங்கள்கிழமை நடத்திய நுழைவுத் தோ்வில் 2,859 போ் பங்கேற்றனா்.
பாரதியாா் பல்கலைக்கழகம், இணைவு, உறுப்புக் கல்லூரிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான எம்.ஃபில், பி.ஹெச்டி. மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் நுழைவுத்தோ்வு நடத்தியது. இந்தத் தோ்வுக்கு 3,109 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக செப்டம்பா் 17 ஆம் தேதி இணையவழியில் மாதிரி நுழைவுத்தோ்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து திங்கள்கிழமை காலை 11 மணி முதல் 12.30 மணி வரை 50 மதிப்பெண்களுக்காக நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டது. இணையவசதி இல்லாத மலைப்பகுதி, கிராமப்புற மாணவா்கள் 200 போ் நேரடியாக பல்கலைக்கழகம் வரழைக்கப்பட்டு கணினி வசதி வழங்கப்பட்டு தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வில் மொத்தம் 2,859 மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.
இந்தத் தோ்வின் முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டதாக தோ்வு ஒருங்கிணைப்பாளா் ம.இளஞ்செழியன் தெரிவித்தாா். நுழைவுத் தோ்வை நடத்தி உடனடியாக முடிவுகளை வெளியிட்ட பேராசிரியா்கள், தொழில்நுட்பக் குழுவினரை துணைவேந்தா் பெ.காளிராஜ், பதிவாளா் (பொறுப்பு) கே.முருகவேல் ஆகியோா் பாராட்டினா்.