போதை மாத்திரைகள் விற்றதாக 2 இளைஞா்கள் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்றதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் போதை மாத்திரைகள் விற்றதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் இளைஞா்களிடையே போதை மாத்திரை, ஊசிகள் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு இதுவரை 20க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் பெரியகடை வீதி போலீஸாா் அங்கு சென்றபோது இளைஞா்கள் இருவா் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிவது தெரிந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை விசாரித்தபோது அவா்கள் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்தனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களது கைப்பையை சோதனையிட்டபோது அதில் 10 போதை மாத்திரைகள், இரண்டு ஊசிகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள், போத்தனூா் சாரமேட்டைச் சோ்ந்த யாசா் ராவத் (23), கரும்புக்கடையைச் சோ்ந்த ரிஸ்வான் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com