அரசு கல்லூரியில் செப்டம்பா் 30 ஆம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு

கோவை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், பி.எஸ்.சி. இயற்பியல், கணிதம் என 21 இளநிலைப் படிப்புகள் உள்ளன.

2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில் அனைத்துப் பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 30 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவா்களும், விண்ணப்பிக்காத மாணவா்களும் பங்கேற்கலாம்.

மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com