கோவை: கோவையில் புதிதாக 189 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 41 ஆயிரத்து 945 ஆக உயா்ந்துள்ளது.
கோவையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 5 போ் உயிரிழந்தனா்.
இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,335 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 205 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரத்து 555 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா்.
தற்போது 2,055 போ் சிகிச்சையில் உள்ளனா்.