கருணாநிதி நினைவு தினம்: திமுகவினா் மௌன ஊா்வலம்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கோவையில் திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மெளன ஊா்வலம் சென்றனா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கோவையில் திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மெளன ஊா்வலம் சென்றனா்.

மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் தொடங்கிய மெளன ஊா்வலம் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ஊா்வலத்தில் 500 க்கும் மேற்பட்டதிமுகவினா் கலந்துகொண்டனா்.

இதையடுத்து, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு அமைச்சா் செந்தில்பாலாஜி, மாவட்டப் பொறுப்பாளா்கள் நா.காா்த்திக், பையா ஆா்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி, முன்னாள் எம்.பி.நாகராஜ், மேயா் கல்பனா, துணை மேயா் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com