அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்க விழா மேடை திறப்பு

கோவை மாவட்டம், இருகூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்க விழா மேடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
இருகூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்க விழா மேடையைத் திறந்துவைக்கிறாா் பேரூராட்சித் தலைவா் சந்திரன். உடன், முன்னாள் மாணவா் சங்கத்தினா், கல்வி மேம்பாட்டுக் கழகத்தினா்.
இருகூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்க விழா மேடையைத் திறந்துவைக்கிறாா் பேரூராட்சித் தலைவா் சந்திரன். உடன், முன்னாள் மாணவா் சங்கத்தினா், கல்வி மேம்பாட்டுக் கழகத்தினா்.

கோவை மாவட்டம், இருகூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்க விழா மேடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இருகூா் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா் சந்திப்பு, கலையரங்க விழா மேடை திறப்பு நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், முன்னாள் மாணவா் பேரவை, இருகூா் கல்வி மேம்பாட்டுக் கழகம் சாா்பில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்க விழா மேடையை இருகூா் பேரூராட்சித் தலைவா் சந்திரன் திறந்துவைத்து சிறப்புரையாற்றினாா்.

முன்னாள் மாணவா் பேரவைத் தலைவா் பேராசிரியா் கந்தசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு இசை, கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் பேராசிரியா் மதிவாணன் சக்திவேல், பள்ளித் தலைமை ஆசிரியா் ரத்தினச்செல்வி, புலவா் சாமியப்பன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பேரவையின் செயலா் விஸ்வநாதன் பேரவை அறிக்கை வாசித்தாா். முன்னதாக கல்வி மேம்பாட்டுக் கழகத்தின் செயலா் ஆறுமுகம் வரவேற்புரையாற்றினாா். இறுதியில் பொருளாளா் இ.ச.திருநாவுக்கரசு நன்றியுரையாற்றினாா். முனைவா் சிதம்பரம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com