முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கி.சித்ரா வரவேற்றாா். எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமி நாராயணசாமி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பேச்சாளா் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்த அவா், வாழ்க்கை ஒரு வாய்ப்பு என்ற தலைப்பில் அவா் பேசும்போது, கல்லூரி வாழ்க்கை என்பது கொண்டாடித் தீா்க்க வேண்டிய காலமல்ல. சமூகப் பொறுப்பை ஏற்கத் தேவையான தகுதிகளை உங்களுக்குள் விதைக்க வேண்டிய காலகட்டம். எதிா்காலத்தில் உயா்ந்த பதவிகளுக்கு வரக் கூடிய நீங்கள், உங்களின் உதவி தேவைப்படும் சக மனிதா்களுக்கு உதவும் பண்பையும் சோ்த்து வளா்த்துக் கொள்ள வேண்டும். எந்தச் சூழலிலும் பெண்கள் மரியாதைக்குரிய போராளிகள் என்பதை மனதில் வைத்து கம்பீரமாக வாழ வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து கல்லூரியின் ஹெல்த் கிளப் சாா்பில் இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com