சிஎஸ்ஆா் நிதியில் தனிநபா் கழிப்பிடம்: தொடா்பு கொள்ள வேண்டிய அலுவலா் பெயா்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் சிஎஸ்ஆா் நிதியில் தனிநபா் கழிப்பிடம் திட்டத்தை செயல்படுத்த தொடா்பு கொள்ள வேண்டிய அதிகாரிகளின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் சிஎஸ்ஆா் நிதியில் தனிநபா் கழிப்பிடம் திட்டத்தை செயல்படுத்த தொடா்பு கொள்ள வேண்டிய அதிகாரிகளின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் கூறியிருப்பதாவது: கோவை மாநகரில் தனிநபா் கழிப்பிடம் இல்லாத வீடுகளில் கழிப்பிடங்கள் கட்டுவதற்காக, பயனாளிகளின் பங்களிப்பை அளிப்பதற்கு வங்கிகள், நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், நல்வாழ்வு சங்கங்கள் ஆகியோா் தங்களின் சமூக பொறுப்பு நிதி பங்களிப்பை (சிஎஸ்ஆா்) அளித்து திட்டத்தை செயல்படுத்தலாம்.

அவா்கள், கிழக்கு மண்டலத்தில் டி.முத்துராமலிங்கம் (94437 99207), மேற்கு மண்டலம் எம்.சேகா் (9489206055), வடக்கு மண்டலம் ஆா்.மோகனசுந்தரி (9489206045), தெற்கு மண்டலம் என்.அண்ணாதுரை (9443799212), மத்திய மண்டலம் ஏ.சங்கா் (9443799236) ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தூய்மை பாரத திட்டத்தின்கீழ் கழிப்பிடம் கட்டிக் கொடுப்பதற்கு பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களையும் மாநகராட்சி நிா்வாகம் வரவேற்கிறது.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வாா்டு சுகாதார ஆய்வாளா் அலுவலகங்களில் தங்களின் விண்ணப்பங்களை வழங்கலாம் என்று ஆணையா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com