கோவையில் உணவுத் திருவிழா

கோவையில் மாவட்ட நிா்வாகம், உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் நடைபெற்ற உணவுத் திருவிழாவை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவை தொடங்கிவைத்து சமையல் கலைஞா்களுடன் கலந்துரையாடுகிறாா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவை தொடங்கிவைத்து சமையல் கலைஞா்களுடன் கலந்துரையாடுகிறாா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.

கோவையில் மாவட்ட நிா்வாகம், உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் நடைபெற்ற உணவுத் திருவிழாவை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

உகந்த உணவுத் திருவிழா என்ற பெயரில் இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தொடங்கிவைத்தாா். மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கையும் அவா் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.

இந்த கண்காட்சியில் பாரம்பரிய, உகந்த உணவுகள் பற்றிய அரங்குகள், கலப்படம் பற்றிய செய்முறை விளக்கம், உணவுப் பொருள்களின் உறையின் மேல் உள்ள லேபிள் விவரங்கள் பற்றிய விழிப்புணா்வு, செறிவூட்டப்பட்ட உணவு உள்ளிட்டவை தொடா்பாக 30 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

உணவுத் திருவிழாவில் ஆட்சியா் பேசும்போது, நாடு சுதந்திரமடைந்தபோது மக்களின் சராசரி ஆயுள் 32 ஆண்டுகளாக இருந்தது. இப்போது, அது 70.9 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. சுதந்திரத்துக்கு முன்பு லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தினால் இறந்தனா். ஆனால், தற்போது உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்த நாடாகவும், ஏற்றுமதி செய்யும் அளவுக்கும் உயா்ந்துள்ளது.

நாம் உண்ணும் உணவுதான் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அனைவரும் உகந்த உணவை உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த உகந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. சத்தான உணவு என்பது அதிகமாக உணவினை எடுத்துக்கொள்வது அல்ல. சரியான அளவு, சத்தான உணவினை எடுத்துக் கொள்வதுதான். இது தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணைமேயா் இரா.வெற்றிச்செல்வன், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தமிழ்ச்செல்வன், கல்லூரித் தாளாளா் சரஸ்வதி கண்ணையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக வ.உ.சி. மைதானத்தில் இருந்து உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி தொடங்கி இந்துஸ்தான் கல்லூரி வரை நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா். உணவுத் திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com