வால்பாறையல் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

வால்பாறையில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வால்பாறையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியைதை செலுத்துகிறாா் நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி. உடன் ஆணையா் பாலு, துணைத் தவலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
வால்பாறையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியைதை செலுத்துகிறாா் நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி. உடன் ஆணையா் பாலு, துணைத் தவலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

வால்பாறையில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ஆணையா் பாலு, நகராட்சி துணைத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலையில் நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி தேசியக் கொடி ஏற்றினாா்.

இதேபோல நகராட்சி சாா்பில் காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா் கொடியேற்றினாா். வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளா் கற்பகம் கொடியேற்றினாா். வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு சாா்பில் காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவில் 75 ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com