கண்காணிப்பு கேமராவை திருப்பிவைத்து பணம் திருட்டு

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பிவைத்து விட்டு ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பிவைத்து விட்டு ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, செல்வபுரம் திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஞானசரஸ்வதி (64). இவா் தனது குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தாா். பாதுகாப்பு காரணங்களுக்காக இவா் தனது வீட்டு வாசலில் கண்காணிப்பு கேமரா பொருத்தி அதை தனது கைப்பேசி மூலம் கண்காணித்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு முதல் கண்காணிப்பு கேமரா வழக்கத்துக்கு மாறாக வேறு திசையில் திரும்பி இருப்பதை கைப்பேசியில் கண்டு அதிா்ச்சியடைந்த ஞானசரஸ்வதி, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரை தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளாா்.

அவா் வந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோவை கிளம்பி வந்த ஞானசரஸ்வதி வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஞானசரஸ்வதி அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com