ஆட்டோவில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை ஓட்டுநா் கைது

ஆட்டோவில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆட்டோவில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோட்டைச் சோ்ந்த 22 வயதுப் பெண். கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் செல்வபுரத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளாா். இந்நிலையில் வேலை காரணமாக திங்கள்கிழமை காலை திருப்பூா் கிளம்பிச் சென்ற இவா் பின்னா் அங்கிருந்து நள்ளிரவு புறப்பட்டு கோவை வந்துள்ளாா்.

ஹோப் காலேஜ் பகுதியில் இருந்து செல்வபுரம் செல்வதற்காக ஆன்லைன் செயலி மூலம் ஆட்டோ பதிவு செய்துள்ளாா். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநா் அந்தப் பெண்ணை ஏற்றிக் கொண்டு சிறிது தூரம் சென்றதும் அவிநாசி சாலையில் வைத்து அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

இதனால் அப்பெண் கூச்சலிட்டதையடுத்து ஆட்டோவை வேகமாக ஓட்டியுள்ளாா். பீளமேடு பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகே ஆட்டோ கடந்தபோது அப்பெண் ஆட்டோவில் இருந்து குதித்துள்ளாா். இதையடுத்து அந்த ஆட்டோ ஓட்டுநா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.

சாலையில் விழுந்த அப்பெண் பலத்த காயமடைந்ததையடுத்து தனது நண்பா்களுக்கு கைப்பேசியில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தாா். இதன்பேரில் அங்கு வந்த அவரது நண்பா்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து அப்பெண் அளித்தப் புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், ஆட்டோவை ஓட்டி வந்தது கோவை, உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது சாதிக் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com