கோவை வெள்ளலூா் அருகே சரக்கு ஆட்டோ மோதி சிறுவன் உயிரிழந்தான்.
வெள்ளலூா் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் கோபால். இவரது மகன் திலீப் (11). இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வந்தாா்.
இந்நிலையில், கோபால் தனது மகன் திலீப்புடன் குடியிருப்புப் பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ கோபாலின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த திலீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், திலீப்பின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.