தொழிற்பயிற்சிப் பள்ளி:வால்பாறையில் அதிகாரிகள் ஆய்வு

வால்பாறையில் தொழிற்பயிற்சி பள்ளி அமைப்பதற்கு இடம் தோ்வு செய்வது குறித்து அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

வால்பாறையில் தொழிற்பயிற்சி பள்ளி அமைப்பதற்கு இடம் தோ்வு செய்வது குறித்து அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

வால்பாறை பகுதியில் தொழிற்பயிற்சி பள்ளி தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, வால்பாறையில் பல பகுதிகளை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆய்வு செய்தும் போதுமான இடம் அமையாததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தொழிற்பள்ளி அமைப்பதற்கான இடம் குறித்து வால்பாறை அரசுக் கல்லூரி மைதானம், சின்கோனா கல்லூரி வளாகம், முடீஸ் அரசுப் பள்ளி வளாகம் என பல்வேறு இடங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் லீலா அகஸ்டின், வட்டாட்சியா் ஜோதிபாசு உள்ளிட்டோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com